1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225

சீவகசிந்தாமணிக் காப்பியம் தொகு

1. நாமகள் இலம்பகம் தொகு

(பண்கனியப்) தொகு

பண்கனி யப்பரு கிப்பய னாடகங்பண் கனியப் பருகிப் பயன் நாடகம்
கண்கனி யக்கவர்ந் துண்டுசின் னாட்செல கண் கனியக் கவர்ந்து உண்டு சில் நாள் செல
விண்கனி யக்கவின் வித்திய வேற்கணிவிண் கனியக் கவின் வித்திய வேல் கணி
மண்கனிப் பான்வள ரத்தளர் கின்றாள். (201)மண் களிப்பான வளரத் தளர்கின்றாள். (201) ( )


(வேறு)

(கரும்பார்) தொகு

கரும்பார் தோண்முத்தங் கழன்று செவ்வாய் விளர்த்துக் கண்பசலை பூத்த காமம்கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ் வாய் விளர்த்துக் கண் பசலை பூத்த காமம்
விரும்பார் முலைக்கண் கரிந்து திங்கள்வெண் கதிர்கள் பெய்திருந்த பொற்செப் பேபோவிரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல்
லரும்பால் பரந்து நுசுப்புங் கண்ணின் புலனாயிற் றாய்ந்த வனிச்ச மாலைஅரும் பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆய்ற்று ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும்பார மாய்ப்பெரிது நைந்து நற்சூற் சலஞ்சலம் போனங்கை நலந்தொ லைந்ததே.(202) பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே. (2012
(வேறு )

தூம்புடை தொகு

தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோற்தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
றேம்புடை யலங்கன் மார்பிற் றிருமகன் றமிய னாகதேம்பு உடை அலங்கல் மார்பின் திருமகன்
வோம்படை யொன்றுஞ் செப்பா டிருமக ளொளித்து நீங்கஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
வாம்புடை தெரிந்து வேந்தற் கறிவெனு மமைச்சன் சொன்னான். (203)ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். (203) )

(காதிவேன்) தொகு

காதிவேன் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப் பட்டகாதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட
நீதிமேற் சேற றேற்றாய் நெறியலா நெறியைச் சேர்ந்துநீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
கோதியல் காம மென்னு மதுவினிற் குளித்த ஞான்றேகோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
வோதிய பொறியற் றாயோ ரரும்பொறி புனைவி யென்றான். (204)ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். (2014)
(வேறு)

(அந்தரத்தார்) தொகு

அந்தரத் தார்மய னேயென வையுறுந்அந்தரம் தார் மயனே என ஐயுறும்
தந்திரத் தாற்றம நூற்கரை கண்டவன்தந்திரம்தான் தம நூல் கரை கண்டவன்
வெந்திற லான்பெருந் தச்சனைக் கூவியொவெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஒர்
ரெந்திர வூர்தி யியற்றுமி னென்றான். (205)எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். (205) )

(பல்கிழியு) தொகு

பல்கிழி யும்பயி னுந்துகி னூலொடுபல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றனநல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
வல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச்அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
செல்வதொர் மாமயில் செய்தன னன்றே. (206)செல்வது ஒர் மா மயில் செய்தனன் நன்றே. ( 206)

(பீலிநன்) தொகு

பீலிநன் மாமயி லும்பிறி தாக்கியபீல் நல் மயிலும் பிறிது ஆக்கிய
கோலநன் மாமயி லுங்கொடு சென்றவன்கோல நல் மயிலும் கொடு சென்றவன்
ஞாலமெல் லாமுடை யானடி கைதொழுஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
தாலுமிம் மஞ்ஞை யறிந்தரு ளென்றான். (207)ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். ( 207)

(நன்னெறி) தொகு

நன்னெறி நூனயந் தானன்று நன்றிதுநல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொன்னெறி யிற்பெரி யாயிது கொள்கெனகொல் நெறியின் பெரியாய் இது கொள்க என
மின்னெறி பல்கல மேதகப் பெய்ததொர்மின் எறி பல் கலம் மேதகப் பெய்தது ஒர்
பொன்னறை தான்கொடுத் தான்புகழ் வெய்யோன். (208)பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். (208 )

(ஆடியன்) தொகு

ஆடியன் மாமயி லூர்தியை யவ்வழிஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ் வழி
மாடமுங் காவும டுத்தொர்சின் னாள்செலப்மாடமும் காவும் மடுத்து ஒர் சில் நாள் செலப்
பாடலின் மேன்மேற் பயப்பயத் தான்றுரந்பாடலின் மேன் மேல் பயப்பயத் தான் துரந்து
தோட முறுக்கி யுணர்த்த வுணர்ந்தாள். (209)ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். (209 )

(வேறு)

(பண்டவழ்) தொகு

பண்டவழ் விரலிற் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கிபண் தவழ் விரலின் பாவை பொறி வலம் திரிப்பப் பொங்கி
விண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் வெய்யவிண் தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
புண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகைபுண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால்குவித் திருக்கு மன்றே. (210)கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. (210 )


(வேறு)

(காதிவேல்) தொகு

காதி வேல்வல கட்டியங் காரனும்காதி வேல் வல கட்டியங்காரனும்
நீதி யானிலங் கொண்டபி னீதிநூநீதியால் நிலம் கொண்ட பின் நீதி நூல்
லோதினார்தமை வேறுகொண் டோதினான்ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய்குணக் கோதினுட் கோதனான். (211) கோது செய் குணக் கோதினுள் கோது அனான். (211 )

(மன்னவன்) தொகு

மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வமன்னவன் பகையாயது ஒர் மா தெய்வம்
மென்னை வந்திடங் கொண்டஃ திராப்பகற்என்னை வந்து இடம் கொண்டு அஃது இராப் பகல்
றுன்னி நின்று செகுத்திடு நீயெனுதுன்னி நின்று செகுத்திடு நீ எனும்
மென்னை யான்செய்வ கூறுமி னென்னவே. (212)என்னை யான் செய்வது கூறுமின் என்னவே. (212) ( )

(அருமைமா) தொகு

அருமை மாமணி நாக மழுங்கவோர்அருமை மா மணி அழுங்க ஓர்
உருமு வீழ்ந்தென வுட்கின ராவவன்உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமங் காழ்த்தமை கண்டவர் தம்முளான்கருமம் காழ்த்தமை கண்டு அவர் தம்முளான்
தரும தத்தனென் பானிது சாற்றினான். (213) தரும தத்தன் என்பான் இது சாற்றினான். (213) ( )

(தவளைக்) தொகு

தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடி
குவளை யேயள வுள்ள கொழுங்கணாகுவளையே அளவு உள்ள கொழும் கணாள்
ளவளை யேயமிர் தாகவவ் வண்ணலுஅவளையே அமிர்து ஆக அவ் அண்ணலும்
முவள கந்தன தாகவொ டுங்கினான். (214)உவளகம் தனது ஆக ஒடுங்கினான். (214) ( )

(விண்ணினோ) தொகு

விண்ணிட னோடமிர் தம்விலைச் செல்வதுவிண் இடனோடு அமிர்தம் விலைச் செல்வது
பெண்ணின் னின்பம் பெரிதெனத் தாழ்ந்தவபெண் நின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்தவன்
னெண்ண மின்றி யிறங்கியிவ் வையகந்எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
தண்ணந் தாமரை யாளொடுந் தாழ்ந்ததே. (215)தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே. (215) ( )

(தன்னையாக்) தொகு

தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப்தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
பின்னை வௌவிற் பிறழ்ந்திடும் பூமகபின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூமகள்
ளன்ன வன்வழிச் செல்லினிம் மண்மிசைப்அன்னவன் வழிச் செல்லின் இம் மண் மிசை
பின்னைத் தன்குலம் பேர்க்குந ரில்லையே. (216)பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. (216) ( )

(திலகநீண்) தொகு

திலக நீண்முடித் தேவரும் வேந்தருதிலகம் நீள் முடித் தேவரும் வேந்தரும்
முலக மாந்தர்க ளொப்பவென் றோதுபஉலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார்மன்னர்க் கியானிது கூறுவன்குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவு மிக்கனர் தேவரிற் பார்த்திவர். (217)பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். (217) ( )

(அருளுமே) தொகு

அருளு மேலர சாக்குமன் காயுமேல்அருளுமேல் அரசு ஆக்கும் மன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம்வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்றவை வாழ்த்தினும் வையினுமருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
மருளி யாக்க லழித்தலங் காபவோ. (218) மருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. (218) ( )

(உறங்குமாயினு) தொகு

உறங்கு மாயினு மன்னவன் றன்னொளிஉறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமாகறங்கு தெள் திரை வையகம் காக்குமால்
லிறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந்இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
தறங்கள் வௌவ வதன்புறங் காக்கலார். (219) அறங்கள் வவ்வ அதன் புறம் காக்கலார். (219) ( )

(யாவராயினு) தொகு

யாவ ராயினு நால்வரைப் பின்னிடிற்யாவராயினும் நால்வரைப் பின் இடில்
றேவ ரென்பது தேறுமிவ் வையகங்தேவர் என்பது தேறும் இவ் வையகம்
காவன் மன்னவர் காய்வன சிந்தியார்காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவி னுமுரை யார்நவை யஞ்சுவார். (220)நாவினும் உரையார் நவை அஞ்சுவார். (220) ( )

(தீண்டினார்) தொகு

தீண்டி னார்தமைத் தீச்சுடு மன்னர்தீதீண்டினார் தமைத் தீ சுடும் மன்னர் தீ
யீண்டு தங்கிளை யோடு மெரித்திடும்ஈண்டு தம் கிளையோடும் எரித்திடும்
வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே. (221) மாண்டது அன்று நின் வாய்மொழித் தெய்வமே. (221) ( )

(வேலின்) தொகு

வேலின் மன்னனை விண்ணகங் காட்டியிஞ்வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
ஞால மாள்வது நன்றெனக் கென்றியேல்ஞாலம் ஆளவது நன்று எனக்கு என்றியேல்
வாலி தன்றெனக் கூறினன் வாண் ஞமற்வாலிது அன்று எனக் கூறினான் வாள் ஞமற்கு
கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான். (222) ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். (222)

(வேறு)

(குழற்சிகை) தொகு

குழற்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவ னிருப்ப மற்றோர்குழல் சிகைக் கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழற்றிகழ் வேலி னானை நேடிய நெடுங்க ணாளும்நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பி லாட்புறந் தந்தானுங் குரவரைப் பேணல் செய்யாபிழைப்பிலாள் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யாது
திழுக்கினா ரிவர்கள் கண்டா யிடும்பை நோய்க்கிரை களாவார். (223)இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார். (223) ( )

(நட்பிடைக்) தொகு

நட்பிடைக் குய்யம் வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான்நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டழற் காமத் தீயிற் கன்னியைக் கலக்கி னானுகட்டு அழல் காமம் தீயில் கன்னியைக் கலக்கினானும்
மட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான்அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய். (224)குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய் (224) ( )

(பிறையது) தொகு

பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாட்பிறை மதி வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
குறைபடு மதியந் தேயக் குறுமுய றேய்வ தேபோகுறைபடு மதியம் தேயக் குறு முயல் தேய்வதே போல்
லிறைவனாத் தன்னை யாக்கி யவன்வழி யொழுகி னென்றும்இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறைமதி யிருளைப் போழு நெடும்புகழ் விளைக்கு மென்றான். (225) நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். (225)

பார்க்க தொகு

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
[[]]
1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400