குற்றால வளம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


குற்றால வளம்



ஆசிரியர்
ராய.சொ



பாரத சக்தி நிலையம்
புதுவை.




பதிப்புரிமை பெற்றது]

[விலை ரூ.2-0-0




முதற் பதிப்பு. 1500

மார்ச் 1947









Printed at the Liberty Press,Pondicherry.



இந்நூல், குற்றால வளம் என்ற கட்டுரையை முதலாகக்கொண்டு பதினான்கு கட்டுரைகள் பெற்ற ஒரு தொகுப்பு நூல். முதற் கட்டுரையின் பெயரை நூலுக்குக் கொடுத்தல் ஓர் மரபு. இக்கட்டுரைகள் இவ்வாண்டில் எழுதப்பட்டனவல்ல. இருபதாண்டுகட்கு முன் எழுதப்பெற்றவை. எனவே காலத்தால் முற்பட்டவையைப் பாராட்டுவதாயின் அவ்வகையில் இக்கட்டுரைகளைப் பாராட்டுக! அல்லாமல் தகுதிகொண்டு நோக்குவதாயினும் படித்துப் பார்த்து முடிவு கட்டுக!

பெரும்பாலாக நீதிபற்றிக் கூறும் இக்கட்டுரைகள் முன்னர் "ஊழியன்" பத்திரிகையில் வெளிவந்தவை. அக்காலத்துக்கும் இக்கட்டுரைகள் பொருந்துவனவே. ஆகலின் எனது அரிய நண்பர் பாலுவின் விருப்பத்திற்கேற்ப கட்டுரைகள் நூல் வடிவமாக வெளிவருகின்றன. கட்டுரைகளின் பெருமை சிறுமைகளை நான் சொல்லக் கூடாதல்லவா? அன்பர்கள் தீர்மானிக்க!


அமராவதி புதூர்,
26-3-47

ராய.சொ.


பதிப்புரை.

திரு. ராய.சொ. செந்தமிழ்ச் செல்வர்; காந்தீயத்தில் தோய்ந்த வாழ்வடையார். இப் புலவர் இயற்றிய சுற்றுலாவளம் தமிழகத்து அரிய விருந்தாதம். இக் கட்டுரை நூலின் நயங்களைக் கவி, யோகி சுத்தானந்த பாரதியார் அளித்த முன்னுறையிற் கண்டு கொள்ளலாம். தமிழுக்கு நல்லணியாகும் என்றே இந்நூலை வெளியிடுகிறோம்.


தமிழர் எமது முயற்சியைப் போற்றி, ஊக்கிமேன் மேலும் பாரத சக்தி நிலையம் தனது அருட்பணியில் முன்னேறச் செய்க. திருவருள் எம்மைத் தொண்டிற்குத் தொண்டு நடத்துக.


பாரத சக்தி நிலையத்தார்,

புதுச்சேரி.

முன்னுரை.

நல்ல தமிழுக்கு நவ சக்தியும், ஊழியனும் என்பர். புலவர் மணிகளான திரு. வி. க., ராய. சொக்கலிங்கனார் ஆகிய இருவரும் தமிழருக்குச் செந்தமிழால் தொண்டு செய்த செம்மொழிச் செல்வர். ராய. சொ வின் உள்ளம் திருக்குறளிலும், திருவாசகத்திலும் ஊறிப் பண்பட்ட தமிழ் உள்ளம். தமிழுணர்ச்சியும், நாட்டுணர்ச்சியும் அந்த உள்ளத் துடிப்புகளாகும். இரண்டையும் "குற்றால வளம்” என்னும் இக் கட்டுரைத் தொகுதியிற் காணலாம்.


இந்நூல், சம்பந்தப் பெருமான் பாடிய பெருந்தண் சாரல் வளஞ்செய்யும் குற்றாலக் காட்சியை அழகிய சொல்லோவியமாக நம் முன் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து சிந்தனை அருவி உலகவாழ்வின் பல்வேறு துறைகளை வளஞ்செய்து செல்கிறது. இந்நூலை வாழ்க்கை வளம் என்றே சொல்லலாம். தெய்வத்தன்மை, உலகியல்பு, நல்லன நாடல், கல்வியும் அறிவும், நிலையில்லா வாழ்வு, அடக்கம், அழுக்காறாமை, நல்லொழுக்கம், அஞ்சாமை, வகுப்பு, ஒருமையுணர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு, சாதி மாயத்தின் தீமை, மடமைச் செருக்கு முதலிய பல அரிய பொருள்களை இந்நூல் விளக்குகிறது. மலையருவியில் தொடங்கிய கட்டுரை மலைநாட்டில் முடிகிறது. இந்நூல் திருக்குறளை அளவு கோலாகக் கொண்டு, உலக வாழ்வை அளக்கிறது. காந்தியடிகளை நல்வாழ்விற்கு இலக்காகக் காட்டுகிறது. இந் நூலின் உள்ளம் வள்ளுவர்; உயிர் காந்தீயம் என்னலாம்.

இஃது அறிஞர் எழுதிய அறிவுரைக் தொகுப்பு. படிக்கப் படிக்கப் பண்புள்ள பயன் பெருகும் நன்னூல்.

இந்நூலின் அருமை யறிந்தே பாரத சக்தி நிலையத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்; தமிழர் இக் கட்டுரை அருவியை அள்ளிப் பருகுக!


எந்தாய் வாழ்க!


புதுச்சேரி, }

சுத்தானந்த பாரதி.'

விய பங்குனி



"https://ta.wikisource.org/w/index.php?title=குற்றால_வளம்&oldid=1548016" இலிருந்து மீள்விக்கப்பட்டது