என் பார்வையில் கலைஞர்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

என் பார்வையில் கலைஞர்



சு. சமுத்திரம்



ஏகலைவன் பதிப்பகம்

9, இரண்டாவது குறுக்குத் தெரு,

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்,

சென்னை - 600 041

4917594

நூல் : என் பார்வையில் கலைஞர்

முதல் பதிப்பு : டிசம்பர், 2000

வடிவம் : “டெமி”

பக்கங்கள் : 172+20 =192

விலை : ரூ. 60/-

உரிமை : ஆசிரியருக்கு


வெளியீடு :

ஏகலைவன் பதிப்பகம்

9, இரண்டாவது குறுக்குத் தெரு,

டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,

சென்னை - 600 041

போன் : 4917594

ஒளி அச்சு:

ஏகலைவன், சென்னை - 41

அச்சு :

சக்தி பிராசஸ்

சென்னை - 600 081.

கலைஞர் பேசுகிறார்

(சு.சமுத்திரம் எழுதிய நூல்களை வெளியிட்டு 26.7.96 அன்று கலைஞர் ஆற்றிய உரை)

இந்த நிகழ்ச்சியைக் காணும்போதும், கலந்து கொண்டு இருப்பதை நினைக்கும்போதும், இந்த விழாவைப்பற்றி கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தரு நிழலே, நிழல் தந்த சுகமே என்று நான் வர்ணிக்க வேண்டியது இருக்கிறது. காலையிலிருந்து கடும் பணிகள் பலவற்றை ஆற்றிவிட்டு, மாலையிலும் கடும் பணிகளை எதிர் கொண்டுவிட்டு, இங்கே இந்த இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற நேரத்தில் இது கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவாக, தருநிழலாக, நிழல் தரும் சுகமாக இருக்கிறது என்பதை நினைத்து, நினைத்ததை நெஞ்சிலே பதித்து, பதித்ததை உங்களிடத்திலே நான் பகிர்ந்து கொள்கின்றேன்.

சமுத்திரமே நம்பக்கம்

நம்முடைய அன்புக்கும், பண்புக்கும் உரிய அருமைத் தோழர் சமுத்திரம் அவர்களுடைய மூன்று நூல்கள், இன்று உங்களுடைய அன்பார்ந்த முன்னிலையில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு தண்ணீர் தேசத்திற்கு போயிருந்தேன். (பலத்த சிரிப்பு ) கவியரசு வைரமுத்துவின் தண்ணீர் தேசம். அதுவும் சமுத்திரத்திலே நடைபெற்ற கதை. சமுத்திரம் கதைக்கும் இன்றைக்கு வந்திருக்கிறேன். எனவே கருணாநிதி ஆட்சிக்கு வந்தால், தண்ணீரே கிடைக்காது என்ற சாபத்திற்கு இடையில், தண்ணீர் தேசமே உருவாகிறது என்ற அளவில், தண்ணீர் தேசமென்ன? சமுத்திரமே உன் பக்கம் இருக்கிறது என்ற அளவில் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. (பலத்த கைதட்டல்)

நண்பர் நடராசன், இந்த நிகழ்ச்சியில் ஒரு வேண்டுகோளை விடுத்து, என்னுடைய சிறுகதை ஒன்றை நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பெற்று, வானொலியிலே ஒலிபரப்பிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார். எனக்கு பசுமையான நினைவுகள். அப்போது அவர் என்னிடத்திலே அந்த சிறுகதையைப் பெற்று திருச்சி வானொலியிலே வெளியிட்டது. 1967க்கு பிறகு. நான் அண்ணா தலைமையில் பொதுப் பணித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில். எழுத்துக் கணக்கும் இலக்கிய கணக்கும்...

1947ஆம் ஆண்டு, குண்டலகேசி இலக்கியத்தை, ஒரு நாடகமாக உருவாக்கி மந்திரிகுமாரி, என்று பெயரிட்டு, திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து, திரும்ப, அது என் கைக்கு கிடைத்து விட்டது. அதே வானொலி நிலையம், நடராசன் உருவத்தில் இருபதாண்டுகால இடைவெளிக்குப் பிறகு, என்னிடத்திலே ஒரு சிறுகதையைப் பெற்று, அதை ஒலி பரப்பினார்கள் என்று எண்ணும் போதுதான் எனக்கு வேதனையே. எழுத்தாளர்களை அவர்கள் இருக்கின்ற அந்தஸ்தை வைத்து, அவர்களுக்குள்ள பதவியை வைத்து தயவு செய்து யாரும் கணக்கிடாதீர்கள். (பலத்த கைதட்டல்) எழுத்தை வைத்து கணக்கிடுங்கள் என்பதுதான் எனக்குள்ள கவலையும், அந்த கவலை சார்ந்த வேண்டுகோளும் ஆகும்.

நான் முதலமைச்சராக 89-90ல் பொறுப்பேற்றிருந்த போது, தஞ்சை பல்கலைக்கழகத்தின் சார்பாக ராஜராஜன் விருது வழங்கப்பட்டது. அந்து விருது, நான் எதிர்க்கட்சித் தலைவனாக இருந்தபோதே எனக்காக சிலரால் சிபாரிசு செய்யப்பட்டு, அப்பொழுது வழங்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டு, வேண்டாம் என்று தடுக்கப்பட்டு நின்று போன விருது. எனவே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த வரலாற்றைச் சொல்லி, ‘இதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டபோது மறுத்தேன். இருந்தாலும் பிடிவாதத்தின் காரணமாக, பிறகு, நான் ஏற்றுக் கொண்டேன். அப்பொழுது குடியரசுத் துணைத்தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா அந்த விழாவிற்கு வந்து, அந்த விருதை வழங்கினார். அத்துடன் பல்கலைக்கழகம் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

அந்த நிதியை, நான் பெற்றுக் கொள்ளாமலேயே பல்கலைக் கழகத்திற்கே சேர்த்து என்னுடைய தாய் தந்தையரின் பெயரால், ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழ்ச் சான்றோர்களுடைய பெயரால் ஆண்டுதோறும் சொற்பொழிவுகளை பல்கலைக்கழகத்தில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் சொல்வதற்கு காரணம் நீங்கள் என்னை தயவுசெய்து பதவியில் இருக்கிறேன்: முதலமைச்சராக இருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்து என்னுடைய எழுத்துக்களை பாராட்டாதீர்கள்.

சமுத்திரத்தைச் சோதிக்க ஆசை...

இங்கே சமுத்திரம் சொன்னார். “கலைஞர் முதல்வராக பொறுப்பேற்காமல் இருந்திருந்தாலும், அவரைத்தான் அழைத்து இந்த நிகழ்ச்சியிலே இந்த நூல்களை வெளியிடச் செய்திருப்பேன்” என்று அவர் சொன்னாரே அதைத்தான் விரும்புகின்றேன். (பலத்த கைதட்டல்) அதை சோதித்துப் பார்க்க எனக்குக் கூட ஒரு ஆசை (பலத்த சிரிப்பு) சில ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சராக இல்லாமல் இருந்து, அவரும் இதுபோன்று நூலை எழுதி அப்பொழுது அழைக்கிறாரா இல்லையா என்று பார்க்கவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. இந்த ஆசை சில பேருக்கு ஆறுதலைக் கூட தரும். அப்பாடா என்று பெருமூச்சுக் கூட எழும். (பலத்த சிரிப்பு)

நான் அதற்காக இருப்பவன் அல்ல என்பதை அருமை நண்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுபோன்ற என்னை உணர்ந்தவர்கள் மிகமிக நன்றாக அறிவார்கள். கொள்கைக்காகவே இளம்பிராயம் முதல் வாழ்பவன் நான். அதனால்தான் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கிறேன். அதுவும் உங்களுக்குத்தெரியும். (பலத்த கைதட்டல்) அப்படி வாழதவர்கள் என்ன ஆனார்கள் என்பதைத்தான் சமுத்திரம் “ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்” என்ற அரிய நூலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

கனமான கணங்கள்...

ஆனால், இப்போது எவ்வளவு கனமான பணிகள்! கணம் என்றால் மாண்புமிகு என்ற பொருளில் சொல்லவில்லை. எவ்வளவு அதிகமான பணிகள் என்னை அழுத்திக் கொண்டு இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். சமுத்திரம் நூல் வெளியிட இந்த நாளை குறித்துக் கேட்டபோது நான் சொன்னேன். “அநேகமாக 25ம் தேதி நிதிநிலை அறிக்கையின் மீதான் பதில் உரை முடிந்துவிடும். மறுநாள் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னது உண்மைதான். ஆனால் அந்த அறிக்கையைத் தயாரிக்க நான் எடுத்துக் கொண்ட நாட்கள், அதற்காக நான் விழித்த இரவுகள், அது தயாரித்து வெளிவந்த பிறகு அதைப்பற்றி வந்த விமர்சனங்கள், அதற்கு ஏற்ப, அந்த அறிக்கையில் காணவேண்டிய திருத்தங்கள், நேற்றைய தினம் நான் ஆற்றவேண்டிய பதிலுரை, இதற்காக நான் செலவழித்த நேரம், இன்று காலையிலே, நம்முடைய இழந்த கவுன்சில்-சட்டமன்ற மேலவை மீண்டும் வரவேண்டும் என்பதற்கான தீர்மானத்தின் மீது நான் ஆற்றிய உரை, அதற்குப் பிறகு உலக வங்கியினுடைய இயக்குநரைக் கண்டு சென்னைக்கும், தமிழகத்திற்கும் பெறவேண்டிய உதவிகளைப் பெற ஆலோசனை நடத்திவிட்டு நேராக இங்கே வருகிறேன்.

எழுத்தாளன் சொல்...

சமுத்திரம் இங்கே குறிப்பிட்டதைப் போல எனக்கும் அவருக்கும் நீண்ட காலமாக ஒரு நெருக்கம் உண்டு. பராசக்தி படம் பார்த்ததிலிருந்தே கலைஞரின் தாக்கம் எனக்கு உண்டு என்று சொன்னார். கலைஞரின் தாக்கமும் உண்டு. கலைஞரை சில நேரங்களிலே தாக்குவதும் உண்டு. (பலத்த கைதட்டல்) அந்த தாக்கம் எனக்கு ஊக்கத்தை அளித்தது. தாக்குவது என்னை நிமிர்ந்து பார்க்கச் செய்தது. தாக்குவது என்னை சிந்திக்கச் செய்தது. ஏன் தாக்குகிறார். ஏதோ குறை நம்மில் இருக்கிறது என எண்ணிப் பார்க்கச் செய்தது. எழுத்தாளன் சொல்வது என்றைக்காது ஒருநாள் பலிக்கும்.

நல்லா கேட்ட ஒரு கேள்வி...

நண்பர் சமுத்திரம் அவர்கள் ‘எனது கதைகளின் கதைகள்’ என்ற நூலில் நான் பல நிகழ்வுகளைப் பார்த்தேன். எப்போதும், எந்த ஒரு எழுத்தாளரின் நூலாக இருந்தாலும் அதை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் நிகழ்ச்சிக்கு நான் வருவது, வெளியிடுவது, அந்த நூலைப் பற்றிப் பேசுவது, என்பது நம்முடைய தமிழ்க்குடிமகன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவர் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ என்ற தலைப்பில் இந்தக் கதைக்கான கரு உருவான செய்தியை சொல்லியிருக்கிறார். அதில் சில பகுதிகளை நான் படித்துக் காட்டுகிறேன்.

60-ம் ஆண்டு முற்பகுதியில் சென்னையில் கல்லூரியில் படித்து வந்தேன். நான் இருந்த வீடு சேரிப் பகுதி: காம்பவுண்டு வீடு. சுமார் அய்ம்பது பேரைக் கொண்ட மனித சமூகம் என்னைப் பெரிதும் வசீகரித்தது. ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள், அப்பளம் சுடும் பெண்கள், வடை சுடும் ஆயா ஆகியோரின் மாசுமருவற்ற அன்பு என் மனக் கஷ்டத்தை மறக்கச் செய்தது. அய்ம்பது பேருக்கு ஓரே ஒரு கழிவறை. அதுவும் கதவு இல்லாதது. ‘யார் உள்ளே என்று கேட்டுக் கொண்டே மற்றவர் செல்ல வேண்டும். குளிப்பதோ குழாயடிப் பக்கம்: நான் குழாயில் இறங்கி தவலையில் தண்ணீர் பிடித்து டிரம்மை நிரப்பி குளிக்கவேண்டும். சட்டியோடோ, துண்டோடோ அத்தனை பேருக்கும் முன்னிலையில் ஐந்தரையடி உடம்பை முக்கால் நிர்வாணத்தோடு காட்டிக் கொண்டிருக்க வெட்கமாக இருந்தது. அந்தப் பின்னணியில் அந்த அசுத்தக் காற்றிலும் தென்றல் வாடை கிடைத்தது.”

“என் வீட்டுக்கு பக்கத்து வீடு ஒரு பூக்கார குடும்பம் வாழ்ந்த வீடு. அங்கே வயதுக்கு வந்த ஒரு பூக்காரப் பெண், அம்மாவும் அண்ணனும் உதிரியாக வாங்கி வந்த பூக்களை மாலையாக தொடுப்பது அவளது பணி. அவள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை இவர் சொல்கிறார். (பலத்த சிரிப்பு) என்றாலும் அழகாக இருப்பாள். கலகலவென்று சிரிப்பாள். எதற்கெடுத்தாலும் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ என்பாள். அவளுக்கு என் மீது ஏதோ ஒரு அனுதாபம். நான் குழாயடியில் படும் பாட்டையும் கல்லூரித் தோழர்கள் என் வீட்டுக்கு வந்தால் அவர்களை உட்கார வைக்க இடம் கிடைக்காமல் நான் திண்டாடுவதையும் கண்ட அவள் ஒரு நாள் குழாயடிக்குப் போன என்னை அவள் கையாட்டித் தடுத்தாள்.

முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு - இதை எல்லோரும் என்ன எழுதுவார்கள் என்றால் நாணிக் கோணி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு என்று இவ்வளவு வார்த்தைகளுக்குப் பதிலாக ஓரே வரியில் ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறார். முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு, என் தவலையை வாங்கி தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள். எவரும் கண்ணில் தென்படாதபோது, நான் குளிக்கப் போவதும், அவள் தண்ணீர் பிடித்துக் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. (பலத்த சிரிப்பு) நான் கல்லூரிக்குச் செல்லும்போது, அவள் வாசலில் நின்று என்னை வழியனுப்பி வைப்பாள். கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில், நான் வாங்கும் பரிசுக் கோப்பைகளை இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக அவளிடம் கொடுப்பேன். அவள் அதனை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டுவிட்டு பின்னர் என்னிடம் திருப்பிக் கொடுப்பாள். இவ்வளவுக்கும் அவளை தொட்டதில்லை: கெட்டதில்லை. நம்புவோமாக (பலத்த சிரிப்பு)

பிறகு ஒரு கல்லூரி மாணவரை வீட்டிற்கு அழைத்து வர, அவன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஏதோ ஏகடியம் பேச , அதன் காரணமாக, இவர் மீதே அவள் கோபம் கொண்டு, வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டே போய் விட்டாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேருந்து நிலையத்திலே அந்தப் பெண் வயதான நிலையில், தேய்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அப்பொழுது ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள், அப்பொழுது சமுத்திரம் கேட்கிறார் “இப்படி ஆகி விட்டாயே நானும் வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு விட்டேன். ஆனால் நான் உன்னைக் கேட்கிறேன், நீ அப்பொழுது என்னை காதலிச்சாயா’ என்று அப்படி தேய்ந்து போன அந்தக் கட்டையைப் பார்த்து நீ என்னைக் காதலிச்சாயா என்ற போது, அந்தப் பெண் அப்போதும் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ (பலத்த சிரிப்பு) என்றாள். இதுதான் சமுத்திரத்தின் இலக்கிய நயம். இதை வைத்தே ஒரு கதை எழுதினேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.

மரணச்சுவை

இன்னொன்று. மரண முகத்திலே கூட அந்த நிகழ்வை வைத்து எழுத்தோவியம் தீட்டும்போதுகூட எப்படி நகைச்சுவை மின்னலிடுகிறது. மின்னிப் பளிச்சிடுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“சென்னை மயிலையில் வாழும் மாமுனிவர் குருஜி சுந்தர சுவாமிகளை, நானும் என் துணைவியும் மருத்துவமனைக்கு போய்விட்டு வரும் வழியில், பார்த்தோம். நான், மரண விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளியாகி, அவரை நோக்கினேன். காலை 8 மணிக்கு பத்மாசனம் போட்டு இரவு 8 மணி வரை அப்படியே அமர்ந்திருக்கும் அந்த எண்பது வயது முனிவர் எனக்கு ஆதரவு கூறியதோடு, ஒரு எலுமிச்சைப் பழத்தையும் கொடுத்து “இது சுருங்கச் சுருங்க உன் நோயும் போய்விடும்” என்றார்.

எனக்கு, அது ஒரு பெரிய மனோதிடத்தைக் கொடுத்தது. நான் படுத்துவிட்டால் இலக்கிய உலகமே துடித்துப் போகுமே என்று நினைத்தேன். சென்னை வானொலி நிலைய செய்திப் பிரிவே இயங்காது, என்ற மாய எண்ணம் எழுந்தது. அந்த மாதிரி எந்தப் பிரளயமும் ஏற்படவில்லை . ஒருவேளை, நான் மடிந்திருந்தால், ஒரு சினிமா நடிகையின் கல்யாண செய்திக்குக் கீழே ஒரு சின்னச் செய்தி என்னைப் பற்றி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல

எப்படி உள்ளத்தை தொடக்கூடிய இந்த எழுத்து ஆழம் அமைந்திருக்கிறதென்பதற்காகத் தான் இதை நான் படித்துக் காட்டினேன். அதாவது ஒரு எழுத்தாளனின் மரணம் என்பது அவ்வளவு மலிவாகிவிட்டது. ஏனென்றால் பாரதியாரின் வாரிசு என்றும், பாரதியாரை “நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா” என்றும் பாராட்டிய புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் மரணமடைந்த போது, ஒரு ஆங்கிலப் பத்திரிககையில் எப்படி செய்தி வந்தது தெரியுமா? சொல்லவே எனக்கு வேதனையாக இருக்கிறது. இறந்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு ஒரு சிங்கிள் கால செய்தியாக பாரதிதாசனின் மறைவுச் செய்தி வெளியிடப்பட்டது. அது அவருடைய உள்ளத்தைத் தாக்கியிருக்கிறதென்று கருதுகிறேன்.

அதனால்தான் சொல்கிறார் ‘ஒருவேளை நான் மரணமடைந்து விட்டால் ஒரு சினிமா நடிகையின் திருமணச் செய்திக்குக் கீழே அங்கே கூட பாருங்கள் சினிமா நடிகையின் திருமணச் செய்திக்குக் கீழே... ஒரு சின்னச் செய்தியாக மரணச் செய்தி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல’ என்று குறிப்பிடுகிறார். இப்படி உள்ளத்தை தொடக்கூடிய கதைகளை எழுதியவர்.

பரிணாம மரங்கொத்திகள்

“ஒரு மாமரமும் மரங்கொத்தி பறவைகளும்” என்ற இந்தத் தொகுப்பில் அருமை நண்பர் பொன்னீலன் எடுத்துக்காட்டியதைப் போல, பல அருமையான செய்திகளை சில பாத்திரங்கள் மூலமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். அதிலே குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் பரிணாம வளர்ச்சி, பரிணாமம் எதிர் பரிணாமமாக ஆகிறது. அந்த பரிணாம வளர்ச்சி என்ற வார்த்தையே ஏன் அவருடைய உள்ளத்தில் பிறந்தது என்பது எனக்குத் தெரியும். ‘நான் தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தில் பரிணாம வளர்ச்சி” என்று எங்கேயோ ஒருவர் பேசியது - எங்கேயோ அல்ல சட்டமன்ற பேரவையில் பேசியது, நம்முடைய சமுத்திரத்தின் உள்ளத்தைத் தொட்டிருக்கிறது. அதை வைத்து பரிணாம வளர்ச்சி எப்படி ஆகியிருக்கிறதென்பதைத்தான் இந்த எழுத்தாற்றலின் மூலமாக அவர் காட்டியிருக்கிறார்.

பரிணாம வளர்ச்சியும், எதிர்ப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. எடுத்துக்காட்டாக மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த மிகப் பெரிய மிருகமான ‘டைனோசர்’ இப்பொழுது ஓணானாக சிறுத்துப் போனது. நாட்டில் மிகப் பெரிய தாவரமான ஒரு மரவகை இப்பொழுது பிரளிச் செடியாக ஆகிவிட்டது. இப்படி நடமாடும் பல்கலைக் கழகமான தமிழன், தவழும் நிலைக்கு தள்ளப்பட்டதும் ஒருவிதப் பரிணாமமே’ (பலத்த கைதட்டல்) புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விளக்கம் தேவையில்லை. 

நடந்தது, நடக்காது

இன்னொரு இடத்திலே எந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம் இந்த மாநிலத்தில் நாட்டில் வளர்ந்து விட்டது என்பதை “கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்” என்ற தலைப்பில் அருமை நண்பர் சமுத்திரம், பழனிச்சாமி என்கின்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக விளக்குகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு நெஞ்சுவலி, அடிக்கடி மாத்திரை சாப்பிடவேண்டும். ஆனால் அவர் உணவு அருந்தும் பொழுது ஒரு பயங்கரமான செய்தி வருகிறது. சென்னை மாநகரத்தில் சாக்கடை தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றாகக் கலந்து விஷமாகிவிட்டது என்ற செய்தி வருகிறது.

இதை உரியவர்களிடத்தில் உடனே சொல்ல வேண்டும் என்பதற்காகப் புறப்படுகிறார். புறப்படுகிற வழிகளிலெல்லாம் பல தடங்கல்கள். அந்த ஒவ்வொரு தடங்கலையும் மீறிக் கொண்டே அவர் கடைசியாக ஒரு இடத்திற்குப் போகிறார். ஒவ்வொரு தடங்கலையும் கடக்க வேண்டுமேயானால் அந்த கதாபாத்திரத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களுக்கு அந்த லஞ்சத்தை கொடுத்துவிட்டுதான் கடக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர் போலீஸ்காராக இருந்தாலும், மற்ற எந்த அதிகாரியாக இருந்தாலும், இவர்களை தாண்டிச் செல்ல லஞ்சம் தேவைப்படுகிறது. இவ்வளவும் கொடுக்காமல் பழனிச்சாமி என்கின்ற அந்த நல்ல மனம் படைத்த மனிதர், தான் எந்தச் செய்தியைச் சொல்லி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று சென்றாரோ அதைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

எந்த இடத்தில் நடக்கிறோம் என்பது புரியவில்லை. தலை பம்பரமானது: இருதயம் மத்தளம் ஆனது. சில நிமிடங்களில் அந்தக் குளிரிலும் உடம்பு வியர்த்தது. மார்பும் முதுகும் ஒன்றையொன்று பிய்த்துக் கொள்வது போல் வலித்தன. சொல்ல முடியாத வலி. நரம்புகள் தோய்ந்து கொண்டிருந்தன. வாயில் நுரையும் ரத்தமுமாய் நல்ல தண்ணீரும் சாக்கடையும் கலந்தது மாதிரி. இவரது முகமோ கோணல்மாணலாக. பழனிச்சாமி புரிந்து கொண்டார். ரத்த அழுத்தம் கூடிவிட்டது. சர்க்கரை அளவு ஏறிவிட்டது. இதயத் துடிப்பு குறைந்து கொண்டிருக்கிறது- இந்த நாட்டைப் போல!’

பழனிச்சாமி ‘ஆனந்தம்மா, ஆனந்தம்மா’ என்று தன்னுடைய மனைவியை அழைத்தபடியே தரையில் சாய்ந்தார். காலற்று விழுந்தார். மூச்சற்றுப் போனார். இந்த பழனிச்சாமி செத்ததே செத்தார். இன்னொன்றையும் தெரிந்து கொண்டாவது செத்து இருக்கலாம். அதாவது இவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து எடுப்பதற்குக் கூட அன்பளிப்புக் கொடுக்க வேண்டுமென்பது சமூகச் சிலுவையைச் சுமந்த பழனிசாமிக்கு தெரியவே தெரியாது.”

இது நடந்த கதை. இனி நடக்கக் கூடாதென்பதற்காக எழுதப்பட்ட கதை. நடக்காது என்ற உறுதியை நான் சமுத்திரம் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்)

நான் முதலிலே குறிப்பிட்டேன். என் மீது அளவு கடந்த பிரியம் ஒன்றும் சமுத்திரத்திற்கு இல்லை. ஆனால் அந்தப் பிரியம் கொள்ளும்படியாக நான் அவரிடத்திலே நடந்து கொண்டிருக்கிறேன் என்பது இன்று அவர் ஆற்றிய உரையின் மூலம் எனக்குப் புரிகிறது. அவருடைய எழுத்துக்கள், சமுதாயத்திலே உள்ள சில கேடுகளை, குழப்பங்களை, புண்களை போக்குவதற்கு என்றைக்கும் ஆயுதமாகப் பயன்படக் கூடிய எழுத்து.

ஆனால் சமுதாயத்தில் இருக்கின்ற இந்த விவகாரங்கள் மாத்திரமல்ல. ஒரு ஆட்சியினால் சுட சமுதாய-கலாச்சாரக்கேடு விளையும் என்பதை அவர் புரிந்து கொட் காரணத்தினாலே தான் அவர் ‘ஒரு மாமரமும்மரங்கொத்தி பறவைகளும்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அண்ணா அவர்கள் இப்படி உருவகப்படுத்தி கதைகள் எழுதியதுண்டு. நானும் இப்படி உருவகப்படுத்தி எழுதிய கதைகள் பல உண்டு. ஆனால் இவரைப் போல பயமில்லாமல் இவ்வளவு பச்சையாக உருவகப்படுத்தி இந்தக் கதைகளை நாங்கள் கூட எழுதவில்லை. அந்தத் துணிச்சலை பாராட்டுகிறேன். அந்தத் துணிச்சல் எப்படி வந்தது என்று பார்க்கிறேன்.

பெயர் சமுத்திரம். சமுத்திரத்தின் தண்ணீர் உப்பு கரிக்கும். ஆனால் சூரிய ஒளி பட்டால் அந்தத் தண்ணீர் நீராவியாகி மழையாகப் பொழியும். மழையாகப் பொழியும் போது தூய தண்ணீராக இருக்கும். உப்பு கரிக்காது. சூரிய ஒளி பட்டதால் சமுத்திர நீர் நல்ல நீராகிறது. (பலத்த கைதட்டல்) வாழ்க சமுத்திரத்தின் புகழ் என்று வாழ்த்துகிறேன்.

என்னைப்பற்றி நான்
-சு.சமுத்திரம்

என் பார்வையில் கலைஞர் என்ற இந்த நூலை படிப்பதற்கு முன்பு என் பார்வை என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவல், வாசகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, அதை தெரியப்படுத்த வேண்டிய உற்சாகமும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளன. இந்த வரிகளை எழுதும்போது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பத்திரிகையில், கா, கா, கா என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையே நினைவுக்கு வருகிறது. அதில் இப்படி ஒரு பாத்திரத்தை சித்தரித்து இருந்தேன்.

‘பண்டாரம் என்னமோ சிவப்புத்தான். ஆனாலும் அவனை காக்கா என்றே அழைப்பார்கள். அவனது மேலதிகாரி, ஆகாயத்தில் வெள்ளைக் காக்கா பறப்பதாக சொன்னால், ‘ஆமாம் நானும் பார்த்தேன்’ என்று சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால், அந்த அதிகாரியோடு சரிக்குச் சமமாய் பேசியதாய் ஆகிவிடுமாம் ஆகையால் ‘நீங்கள் பார்த்ததை நான் பார்த்தேன் என்பான்.’

நான், எனது பாத்திரத்தை சித்தரித்து இருப்பது போலவேதான், நம்மைவிட மேன்பட்டவர்களைப் பற்றி, நாம் எழுதும்போது ஒரு காக்காத்தனம் வந்து விடுகிறது. பெரும்பாலானவர்கள், முழுக்க முழுக்க, குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில், எவர் மேலோங்கி நிற்கிறாரோ அவரைப் பற்றி புகழ்ந்து தள்ளி, காரியம் சாதித்துக் கொள்வதையே நோக்கமாக கொண்டவர்கள். கலைஞரைப் பற்றிய பல நூல்களும், இப்படிப் பட்டவையே. இந்தப் பட்டியலில் இந்த நூலும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே என்னைப் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னைப்போல் கலைஞரை வெறுத்தவர் எவரும் இல்லை. இப்போது என்னைப்போல் அவரை விரும்புகிறவரும் எவரும் இல்லையென்பதை வாசகர்கள் இந்த நூலை படித்துவிட்டு புரிந்து கொள்ளலாம். இந்த மாற்றம், ஆண்டுக் கணக்கில் அங்குலம் அங்குலமாக ஏற்பட்ட ஒன்றாகும். இப்போதுகூட, நான் கலைஞரின், இலக்கிய நண்பர்களின் உள்வட்டத்தில் இருப்பவனும் இல்லை. இருக்க நினைத்தவனும் இல்லை. ஆனால், கலைஞர் மீது இந்த உள்வட்டக்காரர்களுக்கே இல்லாத ஒரு ஈடுபாடும் ஒன்றிப்பும் எனக்கு உண்டு. இந்த ரசவாதம் எப்படி ஏற்பட்டது என்பதை விளக்குவதற்காகவே இந்த நூல். இது, கலைஞரைப் பற்றிய நூல் என்பதை விட என்னைப் பற்றி கலைஞர் வழியாக தெரிவித்துக் கொள்ளும் நூல் என்று கூடச் சொல்லலாம். இந்த நூலில் நான் தான் தூக்கலாக பேசியிருக்கிறேன். கலைஞர் அப்படி பேசவில்லையா என்ற ஒரு கேள்வி எழும்... பேசினார். ஆனாலும், அந்த மகத்தான் தலைவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் வெளிப்படுத்த எனக்கு உரிமை இல்லை .

கலைஞரைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

ஆய்வுத் தகுதி இல்லை. அதிகமான இலக்கியத் தகுதியும் இல்லை. இணையான அந்தஸ்து தகுதியும் இல்லை. காலங்காலமான நட்புத் தகுதியும் இல்லை. அவரது சுகதுக்கங்களில் பங்கு கொண்ட பாசத்தகுதியும் இல்லை. ஆனாலும்-

ஒரு நேர்மையான அதுவும் தன்னலமறுப்பு இலக்கியவாதி - தமிழ்ச் சாதியான் என்ற ஒரே ஒரு தகுதி என்னிடம் நிச்சயம் இருக்கிறது. இந்தத் தகுதியைத்தான் இங்கே வாசகர்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நூற்றுக்கு நூறான தகுதி என்று நானே சொல்லமாட்டேன். அதே சமயம் எனக்கு நானே எண்பது விழுக்காடுகள் கொடுத்துக் கொள்ளலாம்.

திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து மாணவர்களையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டபோது நான் சிறுபான்மை தேசியவாதியாகவே பொதுவாழ்க்கையைத் துவக்கினேன். இதனால் திமுக மயமான மாணவர்கள் மத்தியிலே எனக்கு கிடைக்க வேண்டிய செல்வாக்கை இழந்தேன். ஆனாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சமூகநீதி என்று வந்துவிட்டால் நான் எனக்கு வேண்டியவர்களையும் பகைத்துக் கொள்ள தயங்கியது இல்லை. எடுத்துக் காட்டாக, நான் பிறந்த போது எனக்கு பெயர் வைத்தவர் எங்கள் ஊர் கணக்கப்பிள்ளை. ஆனாலும், அவரது கூட்டுறவுச் சங்க ஊழல்களைப் பற்றி, 15வயதிலேயே ஊரில் கூட்டம் போட்டு கண்டித்திருக்கிறேன்.

முப்பத்திரண்டு ஆண்டுகால மத்திய அரசு அலுவலக வாழ்க்கையில் அரசுக்கெதிராக மூன்று தடவை நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கிறேன். பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி அத்தனையிலும் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனாலும், அவை தந்த விழுப்புண்கள் இன்னும் வலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

புதுடில்லியில், தூசிபடிந்த கண்ணாடியாக இருந்த நான், எனது போராளிக் கைகளாலேயே, என்னை, நானே துடைத்துக் கொண்டு, எங்கள் அகில இந்திய தகவல் துறை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். என்னை இழிவு படுத்திய ஒரு தமிழ் பிராமண அதிகாரியை சங்கம் இழிவு படுத்தப் போனபோது அதை தட்டிக் கேட்டு எனது அந்தரங்கக் குறிப்பேட்டை எழுதும் தலைமை அதிகாரியை பகைத்துக் கொண்டவன் நான்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு எனது சாதியை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், ஒரு சங்கத்தை திருமிகு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கியபோது அந்தக் கூட்டத்தில் வேறொரு காரணத்திற்காக சென்றிருந்த நான் கட்டாயமாக பேச வேண்டியதாயிற்று. அப்போது, ‘பணக்கார நாடார், பணக்கார பிராமணரோடு சேரும்போது ஏன் ஏழை நாடார், எழை பறையரோடும், பார்ப்பனரோடும் சேரக்கூடாது என்று’ அதிரடியாய் பேசியவன். சிவந்தி அவர்களின் மனதையும் நோகடித்தவன். இவ்வளவுக்கும், அவரது ராணியிலும், ராணிமுத்துவிலும் அவர் எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இப்படி பேசினேன்.

இதேபோல் என்னை திடீர் எழுத்தாளனாக்கிய பெருமை ஆனந்த விகடனுக்கே சாரும். அடுத்தடுத்து எனது கதைகளை பிரசுரித்து என்னைப் பிரபலப்படுத்தியது. அதே விகடன் தனது ஜூனியர் விகடன் மூலம் என்னையும், நான் பணியாற்றிய தொலைக்காட்சியையும் சம்பந்தப்படுத்தி இழிவாக எழுதியபோது விகடனை நீதிமன்றத்திற்கு இழுத்தவன் நான். இதன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்கள், நான் அந்த கட்டுரைக்கு மறுப்புத் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்ட போதும், அதை மறுத்தவன் நான். இதனால், பல்லாண்டுகள் விகடனில் என் கதைகள் வெளியாகவில்லை. இவ்வளவுக்கும் விகடன் ஆசிரியருக்கும், அந்த கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்று அறிந்தேன். வேறு ஒரு எழுத்தாளராக இருந்தால் விகடன் ஆசிரியர் வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு அனுதாப அலையை எழுப்பி விகடனில், தனது கதைகளை திணித்திருப்பார். எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போதுதான் எனது நன்றியுணர்வும், விகடன் ஆசிரியரின் பெருந்தன்மையும் ஒரு மையத்தில் சந்தித்தன.

1982 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் சார்பில் நான் எழுதிய ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் ‘குற்றம் பார்க்கில்’ என்ற சிறுகதைக்கும் ஒரே ஆண்டு இரண்டு முதல் பரிசுகள் கிடைத்தன. எம்.ஜி.ஆரே, தன் கைபட அவற்றை வழங்கினார். இந்தப் புகைப்படமும், இன்னொரு புகைப்படம் மட்டுமே அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு அனுப்பப் பட்டன. ஆனாலும், தேவி பத்திரிகை என்னை பேட்டிக் கண்டபோது ‘இது மக்கள் வரி பணத்தில் வந்த பரிசுகள், ஆகையால் மக்களுக்கு விசுவாசமாக எழுதுவேன்’ என்று குறிப்பிட்டேன். ஒரு இடத்தில் கூட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அந்தப் பரிசுகளை அந்த பொன்மனச் செம்மலின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதாக என்னிடத்தில் இன்னொருவராக இருந்தால், சொல்லியிருப்பார். வட்டியும் முதலுமாக அறுவடை செய்திருப்பார்.

எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது இலக்கியத்தில் இடஒதுக்கீடு வந்து விட்டது என்று ஒரு மேட்டுக்குடி பத்திரிகை எழுதப்போய் என் சாதியினர் எப்படியோ என்னை அடையாளம் கண்டு பழனியில் நடைபெற்ற ஒரு மாபெரும் மகாசன மாநாட்டிற்கு என்னை பேச அழைத்து, பெருந்தொகை கொடுத்து கொளரவிக்க முன்வந்தார்கள். ஆனால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் குறிப்பாக தலைவராகவும், எழுத்தாளராகவும் இருப்பவர்கள் சாதிய மறுப்பாளராக இருக்க வேண்டும் என்று அன்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன். ஆகையால், அந்த மகாநாட்டிற்கு வரமாட்டேன் என்று கடிதம் எழுதிப் போட்டேன்.

என் உறவுக்காரர்களைக் கொண்ட சென்னை வியாபாரிகள் சங்கம் இதே காரணத்துக்காக என்னை அழைத்த போதும் மறுத்தேன். நான் நினைத்திருந்தால் சமுத்திரம் சமூபக் பேரவை என்ற இலைமறைவு, காய்மறைவான சாதிய அமைப்பை உருவாக்கி இன்னும் பிரபலமாகி இருக்கலாம். இப்போது என்னைக் கடுமையாகவும், கொச்சைப் படுத்தியும் பேசும் பத்திரிகைகளை ஒருகை பார்த்திருக்கலாம். ஆனால், என் கையோ எழுத்தாளக் கை. தமிழ்ச்சாதி என்ற ஒன்றைக் தவிர வேறு எந்த சாதியும் இல்லை என்று எழுத்தால் சாதிக்க நினைக்கும் கை.

1980 ஆம் ஆண்டு வாக்கில் எனது நாவலான ‘சோற்றுப் பட்டாளம்’ ஊமை வெயிலாக படமாகப் போனபோது அதற்கு இசையமைத்த இளையராஜா அவர்களின் விருப்பப்படி அவரை எனது திரைப்பட தயாரிப்பாளருடன் சந்தித்தேன். பல்வேறு நாடகங்களில் நான் பாடல்கள் எழுதி அவை வெற்றி பெற்றதால், இளையராஜாவிடம் உள்ள பரிச்சயத்தை பலமாக நட்பாக்கி அவர் மூலம் திரைப்பாடல்களை எழுத நினைத்தேன். இதனால், அப்போது நிலவிய வறுமையும் வெளியேறி, இப்போதும் மக்களிடம் இன்னும் நெருக்கமாக போக முடிந்திருக்கும். ஆனால், எங்களது சந்திப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கொஞ்ச நஞ்சமிருந்த பரிச்சயமும் போய்விட்டது. இதனால் ஊமை வெயிலும் ஊமையாகவே ஆக்கப்பட்டது. ஆனாலும், எனக்கு இப்போதும் வருத்தம் இல்லை. சாதிப்பது எப்படி ஒரு சாதனையோ, அப்படி சாதிக்காமல் இருப்பதும் ஒரு சாதனை என்று நினைப்பவன் நான். ஒரு பெண் ஐ.பி.எஸ் எழுத்தாளர் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். நீதிமன்ற விசாரணைகளுக்கு அவர் அரசு வாகனங்களிலேயே வந்தார். இதை ஆட்சேபித்து அப்போது உள்துறை செயலாளராக இருந்த பூரணலிங்கம் அவர்களிடம் ஒரு மனு கொடுத்தேன். இவர் எனது இனிய நண்பர். அவர், அந்த அம்மாவை அங்கேயே வரவழைத்து வழக்கை வாபஸ் வாங்கச் செய்வதாக குறிப்பிட்டார். அவரும் தனது நண்பர் என்பதால் அதை தட்டமாட்டார் என்றும் குறிப்பிட்டார். ஆனாலும், நான் மறுத்துவிட்டேன். எனது வாதியை அவரது மேலதிகாரியை வைத்து நிர்பந்திக்க நான் விரும்பவில்லை.

நான் தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்பவன். ஆனாலும், தமிழ் பேரினவாதத்தையோ, விடுதலைப்புலிகளையோ என்னால் ஆதரிக்க இயலவில்லை. மனச்சாட்சியை தூக்கிப் போட்டுவிட்டு ஆதரித்து இருந்தால் இந்நேரம் உலகத்தில் எதோ ஒரு நாட்டில் பேசிக்கொண்டிருப்பேன். இதன் மூலம் அருமையான நண்பர்களை கூட இழந்திருக்கிறேன்.

மத்தியில் அரசு ஊழியர்கள் நலனை கவனித்து வந்த அப்போதைய அமைச்சரான என் இனிய தோழர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் எனக்கு பதவியில் நீட்டிப்புக் கொடுக்க முன்வந்தார். அதை மென்மையாக மறுத்தவன் நான்.

இவை, என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த விவரங்கள். வாசகர்கள் இந்த நூலின் நம்பகத்தன்மையை இதன் மூலம் எப்படி வேண்டுமானாலும் தீர்மானிக்கட்டும்.

இந்த நூல் குறித்து வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை எனக்குத் தெரிவித்தால் எனக்கு உதவியாக இருக்கும். கலைஞரைப் பற்றி இரண்டாவது பகுதி எழுதப் போகும்போது இந்த திருத்தங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த நூலை அருமையாக அச்சிட்டுக் கொடுத்த மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச.மெய்யப்பன், அதன் நிர்வாகிகளான சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும் என மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.







1953-ஆம் ஆண்டு, கலைஞர் வீட்டிற்கு ஒரு சிறுவனாக வந்தேன். அன்றுமுதல் கலைஞரைப் பார்க்கிறேன். பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் அவரைப் பார்த்து முடியவில்லை.

- வேலையாளர். மணி அவர்கள்

சிப்பிக்குள்ளே


1.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
21
2.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
33
3.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
41
4.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
54
5.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
59
6.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
65
7.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
71
8.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
74
9.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
81
10.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
91
11.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
104
12.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
121
13.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
127
14.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
135
15.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
139
16.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
143
17.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
146
18.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
149
19.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
152
20.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
159
21.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
168
22.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
172
23.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
175
24.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
181
25.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
186
"https://ta.wikisource.org/w/index.php?title=என்_பார்வையில்_கலைஞர்&oldid=1519857" இலிருந்து மீள்விக்கப்பட்டது