வேங்கடம் முதல் குமரி வரை 1

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

வேங்கடம் முதல் குமரி வரை


(முதல் பாகம்)
பாலாற்றின் மருங்கிலே



கலைமாமணி
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்



கலைஞன் பதிப்பகம்
10 கண்ணதாசன் சாலை

தியாகராய நகர்
சென்னை - 600017

சமர்ப்பணம்
அமரர்
ரஸிகமணி டி.கே.சி. அவர்களுக்கு



Rs. 65.00
VENKATAM MUTHAL KUMARI VARAI

by
Tho. mu. BASAKARA TONDAIMAN


First Edition : 1960
Second Edition : 1964
Third Edition : 2000


Published by
KALAIGNAN PATHIPAGAM
10 Kannadhaseo Salai
T Nagar, Chennai - 600 017

Laser by
Surya & Bros. Cheansi - 33


Printed at
Sakthi Printers, Chennai - 600 021

முன்னுரை

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது.

தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு அழகான மூர்த்தங்கள்; சிற்பச் செல்வங்கள். அவற்றை எல்லாம் காணக் காண என் நெஞ்சு நிறைந்தது ; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைந்தது.

இந்த நிலையில்தான் தஞ்சையில் கலைக்கூடம் உருவாக்கும் பணியை ஏற்றேன். கலை தேடி அலைந்த காதல் விரிக்கில் பெருகும். தமிழ் நாட்டின் சிற்ப வடிவங்களின் சிறப்பை உணர்ந்தபோது, அவைகளைப்பற்றி முதலில் தமிழர்களுக்கும், பின்னர் உலக மக்களுக்குமே எடுத்துச் சொல்ல வேண்டும் என்னும் ஆர்வம் பிறந்தது.

இந்த ஆர்வமே கலையைப் பற்றி, கலை வளர்க்கும் நிலையங்களான தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதத் தூண்டியது.

நான் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும், நண்பர் திரு. சதாசிவம், தொடர்ச்சியாகக் 'கல்கி'யில் இலக்கியக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று விரும்பினார். நானும், 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடரில் நூற்று எட்டுக் கோயில்களைப் பற்றி எழுதுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

சென்ற ஒன்பது மாதங்களாகக் கட்டுரைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் அன்பர்கள், அதிலும் முக்கியமாகப் பெண்கள் மிக்க ஆர்வத்தோடு படிக்கிறார்கள் என்று அறிகிறேன்.

முன்னர்க் கோயில்களுக்குச் சென்றால், மூர்த்திகளை அவைகள் இருக்கும் வண்ணத்திலே படம் எடுக்க அனுமதிக்காத தர்மகர்த்தர்களும் அர்ச்சகர்களும் இன்று நான் கோலுக்குச் செல்லும்போது மிக்க ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள்; வேண்டும் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஈட்டுரைகள் வெளி வரும்போது ஆர்வத்தோடு படிந்தவர்களில் நண்பர் திரு.ஏ. கே. வேலன் ஒருவர். அவர் எனக்கு முன்பு அறிமுகம் இல்லாதவர். அவர்தான் இக் கட்டுரைகள் புத்தக உருவில் வர வேண்டும் என்று விருமிபினார். நண்பர் திரு. வே. நாராயணன் அவ் விருப்பத்தை வெளியிட்டுப் புத்தகம் உருவாவதைத் துரிதப் படுத்தினார்.

இவர்களது அன்பும் ஆதரவுமே இக் கட்டுரைத் தொகுதின் முதல் பாகத்தைப் 'பாலாற்றின் மருங்கிலே' என்ற பெயரோடு இப்போது வெளியிடத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.. இலர்களுக்கு என் நன்றி. 'கல்கி'யில் வந்த கட்டுரைகளைப் புத்தக உருவில் வெளியிட அனுமதி அளித்த 'கல்கி' ஆசிரியருக்கும் என் நன்றி.

சுட்டுரைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அவற்றில் எத்தனையோ குறைபாடுகள். "இதைச் சொல்ல விட்டு விட்டீர்கள், இதைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்?" என்று எழுதும் அன்பர் பலர்.

'குறித்த அளவிலே சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல நான் தவறுவதில்லை. சொல்லிடில் எல்லை இல்லை!' என்பது தான் நண்பர்களுக்கு நான் தரும் பதில். இப் புத்தகம் அச்சுக்குப் போகுமுன், பிரதிகளைச் சரிபார்த்துத் தந்தவர் சகோதர் திரு. சா. கணேசன். அவர்களுக்கு என் நன்றி.

இப் புத்தகத்திற்கு ஒரு அருமையான முகவுரையை வழங்கியிருக்கிறார்கள், வேலூர் ஜில்லா நீதிபதி நண்பர் திரு.S.மகராஜன் அவர்கள். கொஞ்சம் அளவிற்கு மேலேயே புகழ்ந்திருக்கிறார்களோ என்று அஞ்சுகிறேன். ஆனால் அணை கட்டித் தடுக்க முடியாத அன்பல்லவா அவர்களை இப்படி எல்லாம் எழுதத் துண்டியிருக்கிறது. அவர்கள் அன்பிற்குத் தலை வணங்குகிறேன்.

நான் நல்ல கலை வாழ்வில் திளைத்த குடும்பத்தில் பிறந்தவன். என் பாட்டனார் திருப்புகழ்ச் சாமி என்னும் முருகதாச சுவாமிகளின் சிஷ்யர். என் தந்தையார் நல்ல சித்ரீகர். பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த இக்கலை ஆர்வம் நாளும் வளர வகை செய்தவர்கள் அமரர் ரஸிகமணி டி.கே.சி. அவர்கள். அவர்களுக்கு இந்நூலை உரிமையாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை விரைவில் அச்சடித்துக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும். இனிப் புத்தகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தமிழ் உலகம்.


‘சித்ரகூடம்’ தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

திருநெல்வேலி-5 1.4.60

இரண்டாம் பதிப்பின் முன்னுரை


‘வேங்கடம் முதல் குமரிவரை’ கட்டுரைத் தொகுதிகள் நான்கு இதுவரை வெளிவந்திருக்கின்றன. தமிழ் அன்பர்கள் அப்புத்தகங்களை வாங்கிப் பெரும் ஆதரவு அளித்து இருக்கிறார்கள். அது காரணமாக இரண்டாம் பதிப்பு வெளியிடும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அன்பர்களுக்கு எல்லாம் என் நன்றி உரியது.

இந்த முதல் புத்தகம் வெளிவந்த உடனேயே, பட உலக அதிபர் திரு.A.K.வேலன், அந்த ஆண்டின் சிறந்த புத்தகம் என்று கருதி ரூபாய் ஆயிரம் பரிசு கொடுத்துப் பாராட்டியிருக்கிறார்கள். இவை எல்லாம் எனக்கு மிகவும் உற்சாகம் தருகின்றன. அவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சித்ரகூடம்’
திருநெல்வேலி-6

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
28.2.64

முகவுரை

சென்ற சில மாதங்களாக நண்பர் பாஸ்கரத் தொண்டைமான் திருக்கோயில்களைப் பற்றி எழுதி வரும் கட்டுரைகள் தமிழ் நாட்டை ஒரு கலக்குக் கலக்கி இருக்கின்றன. ஏதோ சினிமா பத்திரிகைகளைப் படிக்க மக்கள் அடி பிடி போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ‘கல்கி’யில் கோயில்களைப்பற்றி வரும் கட்டுரைகளைப் படிப்பதில் நான் முந்தி நீ முந்தி!' என்று கணவர்களும் மனைவியரும், கிழவர்களும் குழந்தைகளும் போட்டி போடுவதைப் பார்க்கும்போது அதிசயப்பட வேண்டியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன், ஓர் ஆந்திர நண்பர், சர்க்கார் டாக்டராக இருப்பவர் என்னைப் பார்த்ததும், “ஐயா! உங்கள் நண்பர் தொண்டைமான் பெரிய வம்புக்கார ராயிருக்கிறார். அவர் எழுதும் கட்டுரை ஒவ்வொன்றையும் படித்துவிட்டு, என் மனைவி, உடனே புறப்படுங்கள், வள்ளி மலை வள்ளியைப் பார்க்க வேண்டும்; கச்சி ஏகம்பனைக் காண வேண்டும்; தணிகைக் குமரனைத் தரிசிக்க வேண்டும்!” என்றெல்லாம் உத்தரவு போடுகிறாள். சர்க்கார் உத்தியோகத்திலிருக்கும் எனக்கு ஸ்தல யாத்திரை எல்லாம் கட்டி வருமா? ‘போவோம் போவோம்!’ என்று சொல்லி, என் மனைவியைத் தாஜாப்பண்ணி வைத்திருக்கிறேன்,” என்று சொன்னார்.

இப்படி ஸ்தல புராணங்களும் சமயப் பிரசாரகர்களும் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்திருக்கின்றன. இக் கட்டுரைகள் பக்தியையும் ஆர்வத்தையும் அப்படியே ஊட்டி இருக்கின்றன.

இந்தச் சாதனைக்கெல்லாம் காரணம் கட்டுரை ஆசிரியர் நம்மிடத்தில் வைத்திருக்கும் பரிவுதான். நம்முடைய உள்ளப் பாங்கை உணர்ந்து, நம் இதயத்தோடு ஒட்டிச் சமய உண்மைகளைப் பக்குவமாக்கிக் கொடுக்கும் வல்லமை அவரிடத்தில் இருக்கிறது.

‘பதி, பசு, பாசம்’ என்று மடிசஞ்சி பாஷையில் பேசி, அவர் நம்மை மிரட்டுகிறதில்லை. நாமெல்லாம் சினிமா உலகத்தில் ஊடாடிக் கொண்டிருப்பவர்கள் என்று அவருக்குத் தெரியும். ஆகவே ‘கடன்வாங்கிக்கல்யாணம்’ என்ற சினிமா படத்தைப் பற்றிப் பேசி, நம்மைத் தன் வசம் ஆக்கிக்கொண்டு, நம் கையைப் பிடித்துக்கொண்டே, ஏழுமலையும் ஏறி, ‘வான் நின்ற சோலை வடமலை மேல் நின்ற மாதவன்’ சந்நிதியில் கொண்டே நிறுத்தி விடுகிறார்.

நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று அவருக்குத் தெரியும். கலெக்டர் வேலை பார்த்தவருக்கு இது கூடத் தெரியாமலா இருக்கும்? ஆகவே ஜனநாயகத் தேர்தல் முறையைப் பற்றிப் பேசுவார். காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்போம். உடனே பத்தாவது நூற்றாண்டிலே ‘குடவோலை’த் தேர்தல் முறை எப்படி நடந்தது என்று சொல்லுவார். இதைப்பற்றி உத்திரமேரூர்க் கோயிலிலே ஒரு கல்வெட்டு இருக்கிறது என்று சொல்லி நம்மைக் கோயிலுக்கே இழுத்துச் செல்வார். அப்படியே உள்ளே யிருக்கும் வைகுண்டப் பெருமாள் முன்னிலையிலே கொண்டு போய் நிறுத்துவார். நம்மை அறியாமலேயே, பகுத்தறிவாளர்களாகிய நமக்கும் பக்தி வந்து விடுகிறது. இவ்வாறு விதம் விதமான உத்திகளைக் கையாண்டு நமக்குக் களிப்பூட்டுகிறார்.

அவருடைய தமிழைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உணர்ந்ததை உணர்ந்தபடி எல்லாம் தமிழில் எடுத்துக் கூறும் சித்து அவருக்குக் கை வந்திருக்கிறது. 'கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்திக்குப் பின் தமிழை இப்படிச் சுகமாகக் கையாளுபவர் தொண்டைமான்தான் என்று இன்று பல அன்பர்கள் கருதுகிறார்கள்.

அவருடைய தமிழ் நடை, முதலிலிருந்து கடைசிவரை துள்ளி விளையாடிக்கொண்டே செல்கிறது. பம்முவதும், பாய்ச்சல் காட்டுவதும், கர்ணங்கள் போடுவதும், பல்டி அடிப்பதும், ஹாஸ்யங்களை உதிர்ப்பதும், பக்தி வெள்ளத்தில் வாசகர்களை முக்கி முக்கி எடுப்பதுமாக இந்தப் 'பாஸ்கரத் தமிழ்' செய்கிற ஜால வித்தைகள் பலப்பல.

ஆசாமி பொல்லாதவர். விளையாட்டுப் போக்கிலேயே பல அரிய உணர்ச்சிகளைப் புகட்டுகிறார்; மேனி சிலிர்க்கச் செய்கிறார்; புராணக் கதைகளைப் பக்தியோடு சொல்கிறார்; அதே மூச்சிலேயே புராணங்களுக்குப் பகுத்தறிவு முலாமும் பூசுகிறார்.

கட்டுரைகள் ஸ்தலங்களுக்கு வழி காட்டிகளாக அமைந்திருக்கின்றன. அதோடு நின்று விடவில்லை. அவை வரலாற்று ஆராய்ச்சி செய்கின்றன; கல்வெட்டுகளின் நுணுக்கங்களைக் காட்டுகின்றன; பக்திப் பாடல்களுக்கு இலக்கிய விளக்கம் கொடுக்கின்றன; சிற்பக் கலையின் அழகுகளை எடை போடுகின்றன; மூர்த்திகளை அவனிருக்கும் வண்ணத்திலேயே எடுத்துக் காட்டுகின்றன.

நூலைத் தொட்ட தொட்ட இடமெல்லாம் கற்பூர வாசனை வீசுகிறது. சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், அபிஷேகம், அலங்காரம் எல்லாம் பக்திக்கும் ஞானத்திற்கும் இன்றியமையாத சாதனங்கள் என்பதைக் கட்டுரைகள் நிலை நாட்டுகின்றன.

மேலும் ஆசிரியருடைய சமரச நிலை பெரிதும் போற்றத் தக்கதாக இருக்கிறது. வைஷ்ணவ வேஷம் போட்டுக் கொண்டு, சைவத்தை ஒரே செந்துக்காகத் தூக்குவார். சைவ வேடம் பூண்டு, வைஷ்ணவ விளக்கம் செய்வார். இப்படி ஆயிரம் மூர்த்திகளைப் பற்றியும் பேசினாலும், இறைவன் ஒருவன்தான் என்ற உண்மையையும் உணர வைத்து விடுகிறார், எப்படியோ.

ரஸிகமணி டி.கே.சி. சொல்லுவார்கள்: 'பொதுவாக, ஸ்தல யாத்திரை என்றால், கோயில் குளம், மூர்த்தி, பக்தர் குழாம் இவைகளை அனுபவிக்கப் போவதுதான். அதில் நல்ல ஆனந்த அனுபவம் உண்டு!' என்று.

அத்தகைய ஆனந்த அனுபவத்தை ஸ்தல யாத்திரை போகக் கொடுத்து வைக்காவிட்டாலும் - இந்த நூலைப் படிப்பதன் மூலம் நான் அடைகிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் நான் பெற்ற இன்பத்தை அடைவார்கள் என்றும் நம்புகின்றேன்.

ஜட்ஜ் பங்களா
வேலூர் 16-3-60

எஸ். மகராஜன்


பொருளடக்கம்


பக்கம்

1. 13
2. 24
3. 32
4. 41
5. 49
6. 57
7. 64
8. 73
9. 82
10. 91
11. 99
12. 107
13. 116
14. 126
15. 135
16. 144
17. 153
18. 160
19. 169
20. 178
21. 186
22. 193
23. 202
24. 212
25. 221
26. 230
27. 238